ஒரு நிமிடம் சிந்தித்தேன்.
சமுதாயத்திற்கு குர்ஆன் ஹதீஸ் அல்லாஹ் மற்றும் அவனின் தூதர் நம் உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை இந்த சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அற்புதமான ஒரு பணியை செய்யும் உலமாக்களுக்கு….
நாம் செய்யும் அற்புதமான உயர்ந்த ஒரு பணி. அதற்கு ஈடாக இந்த உலகில் எந்த விதமான பணியும் கிடையாது அந்த பணியை செய்யும் ஆலிம்கள் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவர்கள்..
ஆனால் நமது நிலையை நினைத்து நினைத்து கவலை படுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை..
சமுதாயத்திற்காக உழைக்கும் இமாம்களை சமுதாய மக்கள் கை விட்டு விட்டத்தின் நிலமை தான் ஒரு அரசிடம் போய். எங்கள் இமாம்கள் சிரமத்தில் இருக்கிறார்கள். சமுதாயத்திற்காக பணி செய்கின்றனர் ஏதாவது இந்த காலகட்டத்தில் அரசுதான் நிதி வழங்க வேண்டும் என்று நம் இமாம்களின் பழகீனத்தை சொல்லி காட்ட வேண்டிய நிலைக்கே இந்த கேடு கெட்ட சமுதாயம் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது.
ஏன் இஸ்லாமிய சமுதாய மக்களிடம் பொருளாதாரம் இல்லையா ??
லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பொருளாதாரம் செலவழித்து வீடு கட்டவும். ஆடம்பர திருமணம் செய்யவும் இந்த சமுதாயம் வழிகேடட்டிலே செல்கிறதே…
அந்த மஹல்லா நிர்வாகிகள் சார்பாக ஒரு இமாமுக்கு கொரோனா நிதியாக 5000 ரூபாய் கூட கொடுக்க தகுதி இல்லாத சமுதாயமாக மாறி விட்டதா ..
ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையோ. அல்லது லட்சக்கணக்கான ரூபாய்களையோ பேங்கிலோ போட்டு வைத்து கொண்டு இமாம்களை கை கழுவி விடும் கெட்ட சிந்தனை கொண்ட சமுதாயமே…
இமாம்களுக்கு கொரோனா நிதி வழங்குங்கள் என்று கோஷம் போடும் நிலைமைக்கு தள்ளிய இஸ்லாமிய சமுதாயமே … நீ வாழ்வதும் ம மரணிப்பதும் எங்களுக்கு சமம் தான்….
இப்படிக்கு .. இமாம்களில் ஒருவன்